வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால், அதை கட்டாயமாக நிறைவேற்றி வைக்க வேண்டும்
வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதற்கு அரசாங்கம் அதை கட்டாயமாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இதை பிரிவினைவாதம் தூண்டுவதாகவோ போராட்டம் செய்வதாகவோ நினைத்து வட கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களை துன்பத்தில் விழுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்த அவர் சட்டத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வெறுமனே அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்டுபிடித்துக்கொண்டு பகைக்கத்துக்கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை எனவும் அதனால் அரசாஙக்கத்தை எதிர்க்கப்போவதுமில்லை என்று குறிப்பிட்டதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் மக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

East separate north separate why need again? like this talk must stop. east already separated finish.
ReplyDelete