தந்தையினை இழந்த 65 மாணவர்களுக்கு பெருநாள் ஆடைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு
(அனா)
எதிர் வரும் ஹஜ் பெருநாள் தினத்தினை முன்னிட்டு முஸ்லிம் எய்ட் -வானவில் குடும்பசெயற்றிட்டத்தின் கீழ் நன்மையடையும் தந்தையினை இழந்த 65 மாணவர்களுக்கான பெருநாள் ஆடைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு ஹியுமன் எய்ட் சமூகசேவைகள் அமைப்பின் ஓட்டாவடி - காவத்தமுனை காரியாலயத்தில்இடம் பெற்றது.
ஹியுமன் எய்ட் சமூகசேவைகள் அமைப்பின் தலைவர் எம்.பீ.எம்.சித்தீக் வழிகாட்டலின் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லிம் எய்ட் கள உத்தியோகத்தர் எம். பஹியும் கலந்துகொண்டார்.



Post a Comment