200 வது டெஸ்ட்டில் சச்சின் 'டக் அவுட்' மேற்கிந்திய தீவுகள் அணி விருப்பம்
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆக வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் சம்மி கூறியுள்ளார்.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நவம்பர் 6ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 14ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசி போட்டியாகும்.
இது குறித்து சம்மி கூறுகையில்,
சச்சின் விளையாட்டு அரங்குக்குள் நுழையும் போது எந்த அளவுக்கு ரசிகர்களின் சத்தம் கேட்கும் என்று நான் பல முறை பார்த்துள்ளேன். அவரது கடைசி போட்டியில், முதல் பந்திலேயே அவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார்.

Post a Comment