Header Ads



அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டதால் தோல்வியடைந்தோம் - விமல் வீரவன்ச

நியாயமான தேர்தல்கள் மூலமாகவே ஜே.வி.பி அரசியலுக்கு வந்தது என அமைச்சர் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பினார். கொழும்பில் இன்று 24-09-2013 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறினார்.

ஜே.வி.பி இம்முறை தேர்தலில் வீழ்ச்சியடைந்துள்ளது. தமது தோல்விக்கு மற்றவரை குற்றம் சுமத்துவதில் பயனில்லை.

அதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டதால் இம்முறை தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தோல்வியடைந்துடன் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியவில்லை.

கடந்த முறை தனித்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி வெற்றிபெற்றது. விருப்பு வாக்கு முறையிலான தேர்தலில் இப்படியானவற்றை எதிர்நோக்க நேரிடும்.

ஜே.வி.பி மட்டுமல்லாது ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது அரசியலில் தொழு நோயாளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.