Header Ads



மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் குறித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் ஜனநாயகத்திற்கு வலுசேர்த்த சிறந்த ஒரு சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பு அபார வெற்றிபெற்றமை மற்றும் வட மாகாண சபையை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை ஆகிய காரணிகள் தாய்நாடு அடைந்துள்ள பெரு வெற்றியின் மற்றுமொரு படிக்கல் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தெரிவித்துள்ள செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் வடக்கை இயல்பு நிலைக்கு மற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார். 
 

2 comments:

  1. இப்படியொரு அறிக்கையை விடுவதற்காகவேதான் உரிய காலத்திற்கு முன்னதாக வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளை நீங்கள் கலைத்து தேர்தலை நடாத்தினீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

    அவ்வாறின்றி தனியாக வட மாகாண சபைத் தேர்தலை மாத்திரம் நீங்கள் நடாத்தியிருந்தால் இப்படியான ஒரு அறிக்கையினை உங்களால் வெளியிட்டிருக்க முடியாது.

    தேர்தல் பிரச்சார காலத்திலும், தேர்தல் தினத்தன்றும் இம்மூன்று மாகாணங்களிலும் இடம்பெற்றுள்ள வன்முறைகளையும், தேர்தல் விதிமுறை மீறல்களையும், வடக்கில் படைத்தரப்பும், புலனாய்வுக் குழுக்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்து பார்க்கும்போது 'ஜனநாயகம்' என்ற சொல்லுக்கு இன்னமும் சரியான அர்த்தம் இல்லாமல்தான் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Unmaiyana jananayakam irunthirunthal tamilarasu katchi 100% percentage vendu irukkum

    ReplyDelete

Powered by Blogger.