மனித சிறுநீரில் இருந்து செயற்கை பல் தயாரிப்பு
மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சீன ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் குவாங்சுவோ பயோமெடிசின் மற்றும் ஹெல்த் டீத் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை பற்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மனித சிறுநீரில் இருந்து வெளியேறும் செல்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அந்த செல்கள் ரீஜெனரேஷன் முறையில் ஸ்டெம் செல்களாக மாற்றம் செய்யப்பட்டன.
பின்னர் ஸ்டெம் செல்களுடன் எலிகளின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து செயற்கை பற்களை உருவாக்கும் சோதனை நடத்தப்பட்டது. செல் ரீஜெனரேஷன் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 வார காலத்தில் செயற்கை பற்கள் உருவானது. மேலும், பற்களுக்கு தேவையான டென்டல் பல்ப், டென்டின், எனாமல் ஸ்பேஸ், எனாமல் ஆர்கன், உள்ளிட்டவை தேவையான அளவு இருந்தது தெரிய வந்தது.
இந்த சோதனையில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் இயற்கை பற்களை போல் இதன் கடின தன்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பற்களில் கடினத் தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment