Header Ads



'வாழைச்சேனையில் காணாமல்போன படகு கல்முனையை வந்தடைந்தது'

(நஷ்ஹத் அனா)

வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வாயல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03.08.2013) ஆழ் கடலுக்கு தொழிலுக்காக சென்று காணாமல் போன இயந்திரப் படகு நேற்று இரவு (11.08.2013) கல்முனை கடற்கரையை வந்தடைந்துள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.

படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரு காரணமாக படகை செலுத்து முடியாமல் கஸ்டப்பட்டதாகவும் பிரகு படகில் இருந்த கூரப்பாயின் உதவியுடன் காற்று வீசிய திசையை நோக்கி கல்முனைக் கடற்கரையை வந்தடைந்துள்ளதர்கள் என்றும் படகில் சென்ற மூன்று பேரும் தேராக்கியமாக இருப்பதாகவும் படகு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.