கற்கை நெறிகளை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட கற்கை நெறிகளை பூர்த்தி செய்த தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு உளவியல் கற்கை நிலையத்தில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி .ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் கருத்துரை வழங்குவதையும், பங்குபற்றுனர்களையும், இரத்த தானம் வழங்கியதில் ஜனாதிபதி விருதைப் பெற்ற திரு.பிரான்சிஸ் கௌரவிக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.



Post a Comment