Header Ads



முஸ்லிம் பாடசாலையில் அரசியல்வாதியின் கேவலமான செயல்..!

திருகோணமலையின் நகர்புற  முஸ்லிம் பாடசாலை ஒன்றில்  நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரும், அவரின் அடிவருடியான சகா ஒருவரும் குறித்த பாடசாலை அதிபர் க.பொ.த (உயர்தர) பரீட்சைக் கடமைக்கு சமூகமளித்திருந்த வேலையில் அனுமதியின்றி 19.08.2013ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை வகுப்புகளுக்குள் நுழைந்து தங்களுக்கு மரியாதை தரவில்லை என்பதற்காக மாணவர்களை வரிசையாக நிறுத்தி திட்டியதோடு மிகவும் அனாகரிகமான முறையில் சம்பவத் திரட்டு (லொக் புக்) புத்தகத்தையும் பலவந்தமாக கேட்டுள்ளார்.

அன்றய தினம் பாடசாலையில் பொறுப்பாக இருந்த உதவி அதிபர் சம்பவ திரட்டுப் புத்தகத்தை கொடுக்க மறுத்த போது தனக்கு அரசியல் அதிகாரம் இருப்பதாகவும் தான் இப்பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் என்றும் அதில் எழுதுவதற்கு அதிகாரம் இருப்பதாகவும் விவாதித்து புத்தகத்தை எடுத்து எழுதியுள்ளார். அதே சமயம் அலுவலகத்தில் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் அவ்விடத்தில் நிலைமையை அவதானித்துள்ளார்.

எனவே இவ்வாறான சம்பவத்திற்கு கல்வி அதிகாரிகள் பெறுப்புவாய்ந்த மாகாண  மாவட்ட அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி சமூகம் எதிர்பார்க்கிறது.

அண்மைக்காலமாக அரசியலை ஆதாரமாகக் கொண்டு கல்விச் சமூகத்தை அடக்கியொடுக்க பார்க்கும் இந்த அநாகரிகமான செயற்பாடு நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.

5 comments:

  1. இந்த மாட்டுக்கூட்டத்திற்கு உரிய இடத்திலேயே சரியான பதிலடியைக்கொடுக்கவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  2. அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தால் .... அது போகிற சருகிக்கதான் போகும் ! என்று சொல்வார்கள். அதுபோல எமது வாக்காள பெருமக்கள் இவர்களை ஆழ அறியாமல் தங்களது பெருமதியான வாக்குகளை அளித்து தலைவர்களாக அல்லது அரசியல்வாதிகளாக மாற்றுவதன் அகோர முடிவுதான் இவைகள். அதாவது நாம் தேடிக் கொண்டவைகளே !!!

    ReplyDelete
  3. tharam ketta Arasiyal Saakkadaikalai makkal nirakarikka wendum;

    * iwarkalin payarakalai makkal mathiyil theyriyap padutha wendum.
    * Election kaalankalil ithu ponra katturaikal meel pathiwu sayap padal wendum
    *FB il iwarkalukku enru thanip pakkam amaithaal . . .!!

    ReplyDelete
  4. SL poor pichchekkara voters will not know to whom to cast their votes, They get money and votes to those boody and made them leaders to rule like this.

    ReplyDelete
  5. of course he`s done a stupid thing (as usual) but nobody can justify the french leave of 23 teachers out of 40 teachers in the school in that particular day.
    Teachers are also exploiting the privileges. i don`t see any difference between these teachers and the stupid politician.

    ReplyDelete

Powered by Blogger.