கற்பிட்டி அல் அக்ஸா பாடசாலை மைதானத்தில் பெருநாள் தொழுகை
(பஸீர் .M. அர்ஸ்த்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இம்முறையும் ஈகை பெருநாள் விசேட தொழுகையும் கொத்பா பிரசங்கமும் விசேட துஆ பிரார்த்தனையும் காலை 6 மணி முதல் 6.45 வரை ஊரிலுள்ள அனைத்து சகோதரர்களின் பங்களிப்போடு வான் அதிரும் தக்பீர் முழக்கத்தொடு வெகு சிறப்பாக நடந்தேறியது. தொழுகைக்கான இமாமத் கற்பிட்டி புதுப்பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி நிஸாம்தீன் (பாகிஸ்தான்) அவர்களாலும் பிரசங்கம் மௌலவி நூர் காஸிம் (மதவாக்குளம்) அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Post a Comment