Header Ads



தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல்குர்ஆன் (வீடியோ)


முழு தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல் குர்ஆனை டுபாயை மையமாகக் கொண்டு செயற்படும் சிரிய நாட்டு மொஹமட் மாஹிர் ஹத்ரி என்ற தொழிலதிபரே புதிய கலைவேலைப்பாடுடனான புனித குர்ஆனை தயாரித்துள்ளதாக கல்ப் நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தையல் இயந்திரம், பட்டு நூல், வெல்வட் புடவையைக் கொண்டு இந்தக் குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பஉதவி எதுவும் இன்றி வெறும் கைகளால் அல் குர்ஆன் வசனங்கள் எழுத்தணி வடிவில் உருவாக்கப்பட் டுள்ளது.

இந்த கலைப்படைப்பு தற்போது டுபாய் வர்த்தக கண்டகாட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது டுபாய் சர்வதேச புனித குர்ஆன் கண்காட்சியின் ஓர் அங்கமாகவே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

426 பக்கங்கள், 200 கிலோ கிராம் எடை கொண்ட இந்த குர்ஆன் 5 மில்லியன் யூரோ பெறுமதி கொண்டதாகும்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u-Saz7tS-xE

3 comments:

  1. புனித குறான் படித்து நன்மையை பெருவதட்குதான் வெறுமனே சாதனை படைப்பதட்கல்ல இவ்வளவு பெரிய செல்வத்தை இறை பாதையில் செலவு செய்து இருக்கலாம்

    ReplyDelete
  2. அல் குறான் இன்று ஏட்டிலும். துணியிலும் தானே இருக்கிறது. வாள்க்கையில் இல்லையே. இனி எங்கே அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்
    சமூகத்திணரை வந்தடையும்.

    اللهم علمنا من القرآن ما جهلنا وذكرنا منه ما نسينا
    برحمتك يا أرحم الراحمين

    ReplyDelete
  3. our society will start to change their lives after watching this cloth quraan .

    ReplyDelete

Powered by Blogger.