Header Ads



ஈராக்கின் சிறையிலிருந்து பெருமளவு அல்ஹைதா போராளிகள் தப்பியோட்டம்..?

ஈராக்கின் தாஜி மற்றும் அபு கரிப் நகரங்களில் உள்ள 2 சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1000 அல்-கொய்தாக்கள் சிறையில் இருந்து தப்பியோடி விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 நேற்றிரவு நள்ளிரவு 2 சிறைகளையும் முற்றுகையிட்ட அல்ஹைதா போராளிகள் விடிய, விடிய நடந்த துப்பாக்கி சண்டையில் 12 சிறை காவலர்களை சுட்டுக்கொன்றுவிட்டு சுமார் 1000 அல்-கொய்தா போராளிகள் விடுவித்து சென்றதாக ஜிஹாத் அமைப்பினர் இன்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டனர்.

ஈராக் ராணுவ அதிகாரி ஹக்கிம் அல்-சமிலியும் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.பின்னர், சம்பவம் நடைபெற்ற சிறைகளுக்கு ஹெலிகாப்டரில் வந்த ராணுவ வீரர்கள் போராளிகள் அடித்து விரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.