Header Ads



மஹியங்கனை பள்ளிவாசலை தாக்கியது யார்..? - ஜனாதிபதி கேள்வி

கண்டி ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை, 13 ஆம் திகதி, கிழக்கு மாகாண சபையில் தோன்றியுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது இந்த 3 முஸ்லிம் அமைச்சர்களும் மஹியங்களை பள்ளிவாசலின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பள்ளிவாசலில் பன்றி இரத்தம் ஓட்டப்பட்டமை குறித்தும் தமது மனக்கவலைகளை ஜனாதிபதி மஹிந்தவிடம வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தையே குற்றம் சுமத்துவதாகவும், இதுபோன்ற சம்பவங்களை அரசாங்கம் தடுத்து நிறுத்தலாமென்று முஸ்லிம் சமூகம் நம்புவதாகவும் 3 முஸ்லிம் அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்களை நோக்கி,  ஓ அப்படியா..?  இந்த சம்பவம் குறித்து நீங்கள் யாரை சந்தேகப்படுகிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் பௌத்தகடும்போக்கு வாத குழுக்கள்தான் என பதில் வழங்கியுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி மஹிந்த மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த கிழக்கு மாகாண தேர்தலின்போது பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக ரவூப் ஹக்கீம் பிரச்சாரம் செய்தார். அப்படிச் பிரச்சாரம் செய்யாதீர்கள் என நான் ரவூப் ஹக்கீமிடம் கூறினேன. தென்னிலங்கை சிங்கள மக்களிடத்திலும், பௌத்த தேரர்களிடமும், இந்த பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டேன் எனவும் கூறியவாறே, குறித்த பேச்சை தொடராமல் (டைவேர்ட்) வேறு ஒரு பேச்சை ஆரம்பித்துள்ளார். 

18 comments:

  1. good joker is he president or brokder for bbs

    ReplyDelete
  2. ஜனாதிபதியின் சிறப்பு மிக்க பதில்.
    Leader if the BBS

    ReplyDelete
  3. அப்படியானால் மஹியங்கன பள்ளிவாசல் சம்பவம் பொய்யா ? ஜனாதிபதியின் கருத்துப்படி அப்படியான சம்பவம் நடைபெறவில்லை ......அப்படிதானே சகோதரர்களே ? இனி என்ன சொல்லபோகின்றிர்கள்? அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் அமைச்சர்மார்கள் எல்லாம் அவர்களுக்கு முடிந்தவரை ஆளுக்கு ஒரு அறிக்கை விட்டனர் நான் இன்னாருக்கு அவசர கடிதம் எழுதுகின்றேன் இன்னாருக்கு சொல்கின்றேன் என்று சும்மா அறிக்கை விட்டதுதான் மிச்சம். எல்லாம் அவரவர்களின் கதிரையை பாதுகாக்க செய்யும் நாடகம்தான்

    ReplyDelete
  4. தூங்குகிறவனை எழுப்பலாம். தூங்குகிறமாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது.

    ReplyDelete
  5. Shameless Muslim ministers, they are good in making statements to satisfy voters. They are not keen in solving the problems faced by Muslims.

    ReplyDelete
  6. அல்லாஹ்வின் பள்ளிவாயல்களில் கை வைக்கிறீர்கள் அல்லவா???
    பார்த்துக்கொண்டே இருங்கள்....!!!!!
    வெகு விரைவில் உங்களை அது சந்திக்கும்...!!!
    அது என்னவென்று புரியவில்லையா???
    சந்திக்கும் போது தெரியும்...!!!!!
    அது மிகக் கடுமையாக இருக்கும்...!!!

    ReplyDelete
  7. மாறி கதைப்பதற்கு நமது அமைச்சர்களுக்கு பயம் எங்கே ஜனாதிபதி கோபப்படுவார் என்று. இவர்கள் எப்படித்தான் நமது உரிமைகளை பேசி வென்றெடுக்கப் போகிறார்களோ தெரியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் இப்படியென்றால் நாம் யாரிடம் செல்வது. அல்லாஹ்தான் இவர்களுக்கு நல்ல மனதைரியத்தை கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  8. ஜனாதிபதி கூறுவதைப் பார்த்தால் அமைச்சா் ஹக்கீம் தான் காரணம் போல் தெரிகறது.சிங்கள தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி அதனை வழி நடத்துவது ராஜபக்ஸ அன்ட் கோ.இது இலங்கை வாழ் அனைவருக்கும் தெரிந்த விடயம் எனேவ இந்த மும்மூர்த்திகள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவார்களா?

    ReplyDelete
  9. ஏவியவனிடமே அம்பை பற்றி முறையிடுவது வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete
  10. Umadhu Sahodhararin Aalkararhal than janadhipadhi awarhale, idhatku mel enna nadawadikkai edukkappohireerhal, muslimgal pongi elundhal singalawarhalukku oda idam illai, kawanam, indha welaiyai seidhawanukku allah kooli koduppan

    ReplyDelete
  11. அப்போ நாமளும் இதுபோன்ற வேலைகளைச்செய்துவிட்டு நாமும் கூட நின்று செய்தவனைத்தேடவேண்டியதுதான்..

    ReplyDelete
  12. until our ministers and MP's there to lick his .... these will happen

    ReplyDelete
  13. Why dont we start QUNOOTH again. we have to begin this unofficially

    ReplyDelete
  14. What was the result of the meeting? Muslim ministers had a very nice dinner!!!

    ReplyDelete
  15. paavam avaruku onnume theriyathu

    ReplyDelete
  16. ithu muslimkalukku oru sothanai ewaraiyum nambamal allah pakkam thisai thirumbum neram ulaka asai piditthawarkalukku marumaiyil entha palanum illai

    ReplyDelete

Powered by Blogger.