இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வித்தியாசமான போராட்டம் (படங்கள்)
(J.M.Hafeez and Mohamed Asik)
இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் தெல்தெனிய டிப்போ ஊழியர்கள் மரம் ஒன்றில் பரன் அமைத்தும், பஸ்வண்டிகள் மீது ஏறி அமர்ந்தும் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களுக்கான தமது மாதாந்தச் சம்பளம் மற்றும் கடந்த நான்கு மாதங்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, சகாய நிதி முதலானவற்றை உடன் செலுத்த வேண்டுமென்று இவர்கள் இவ்வாறு ஒரு பேராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். டிப்போ 100 சதவீதம் ஸ்தம்பித்துள்ளது. சகல ஊழியர்களும் இதில் பங்கு கொண்டுள்ளனர்.
Post a Comment