இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியில் புலிக்கொடியுடன் ஓடியவருக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை
(Tm)ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடந்தபோது புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment