Header Ads



புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் பெப்சி குளிர் பானத்தில் அதிகம்

குளிர்பானங்களில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய கதிரியக்க பொருள் உள்ளதாக, சுற்றுசூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக அளவில், கோக கோலாவும், பெப்சியும் அதிக அளவில் குளிர் பானங்களை தயாரித்து வருகின்றன. 

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர் பானங்களில், நிறங்களை உருவாக்க, 4-மீதைல் லிமிடா சோல், என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. குளிர் பானங்களில், குறிப்பிட்ட அளவுக்கு 4-மீதைல் லிமிடா சோல் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் சில நகரங்களில், நிபுணர்கள், பெப்சி குளிர் பானங்களை சோதித்ததில், இந்த ரசாயனத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கதிரியக்க தன்மை கொண்ட மீதைல் லிமிடாசோல், அதிகப்படியாக உடலில் சேரும் போது, புற்றுநோய் உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம், என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.