முஸ்லிம் வர்த்தகர் படுகொலை - வாஸ் குணவர்தனாவின் விளக்கமறியல் நீடிப்பு
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடத்திசெல்லப்பட்ட வர்த்தகரான மொஹமட் சியாம் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment