கொரிய வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு புதிய வீசா முறை அறிமுகம்
(TW)
தென்கொரிய வேலைவாய்ப் புக்காகச் செல்பவர்களுக்காக தற்போது வழங்கப்பட்டுவரும் ஈ9 வீசா முறையைவிட மிகவும் சாதகமான முறையில் இலங்கை யர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஈ10 என்ற பெயரில் புதிய வீசா முறையொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தென்கொரிய கடற்றொழில் தகவல் தொலைத் தொடர்பு திணைக் களத்தின் பொது முகாமையாளர் லீ சியோங் ஜொங், தென்கொரிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இத்தகவலை அமைச்சர் தெரிவித்தார். ஈ10 புதிய வீசா முறையினூடாக தென்கொரியாவில் மீன்பிடித்துறையில் இலங்கையர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப் புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக சட்டரீதியான நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அதுவரை தற்பொழுது நடைமுறையில் ஈ9 வீசா முறை அமுலுலில் இருக்கும். ஈ9 வீசா முறையினூடாக தென்கொரிய பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
.jpg)
Post a Comment