Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களும், வடமாகாண தேர்தலும் - விஷேட ஆலோசனைக்கூட்டம்

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் யாழ் முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு விஷேட ஆலோசனைக்கூட்டம் ஒன்றினை “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்” செயற்திட்டக் கமிட்டி ஏற்பாடு செய்திருக்கின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) அன்று காலை கொழும்பில் மேற்படி சந்திப்பு இடம்பெறும் எனவும் மேற்படி சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என யாழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளார்கள். 

மேற்படி சந்திப்பின்போது யாழ் முஸ்லிம்களின் நலன்களை அடைந்துகொள்வதற்கு எத்தகைய தேர்தல் நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மேற்படி சந்திப்பில் கலந்துகொள்வதற்கு ஆர்வமுள்ள சமூகப்பிரதிநிதிகள் 0772-272 742 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: எம்.அஜ்மல் மொஹிதீன்
செயற்திட்ட இணைப்பாளர்: “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்”

No comments

Powered by Blogger.