மத்ரஸா மாணவர்களின் தாய்மார்களுக்கான மார்க்க சொற்பொழிவு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை நிதாஉல்பிர் தஜ்வித் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் தாய்மார்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்வொன்று இன்று 04-07-20`3 நடைபெற்றது.
குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி அலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதாஉல்பிர் சமுக சேவை நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் இஸட்.எம்.அமீன் மற்றும் மௌலவியா ஸாமிலா ஹாருன் மௌலவியா ஜாமியா நளீம் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் நிதாஉல்பிர் சமுக சேவை நிறுவனத்தின் முக்கியஸ்தர் இஸட். எம்.நஸீர் குர்ஆன் மத்ரஸாவின் முஅல்லிமாக்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்


Post a Comment