அரசாங்கத்திலிருந்து எவரும் விலகலாம் - தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு யாரேனும் ஒருவருக்கு அவசியம் ஏற்பட்டால், அவர்கள் விலகுவதாக அறிவிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர், ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ரத்துச் செய்யப்பட்டால், தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயகார அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே பெங்கமுவே நாலக்க தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அமைச்சர். அவர் விலகுவதையும், விலகாமலிருப்பதையும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். நீங்க ஏன் வீணாக தேவையில்லாததில் மூக்கை நுழைக்கிறீர்கள்?
ReplyDelete