தென்கிழக்குப் பல்கலைக்கழக 2ம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பம்
(Nf) தென்கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலை, கலாசாரம், முகாமைத்துவம், இஸ்லாமிய கற்கை நெறிகள், வர்த்தக மற்றும் அரபு மொழி பீடங்களைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்கை நெறிகளே மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.
விடுதி வழங்கப்பட்டுள்ள மாணவர்களை நாளை மாலை 5 மணிக்குள் தமக்குரிய விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதி குறித்து நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கடந்த 8 ஆம் திகதி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதுதொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட சுமூக நிலையை அடுத்து இரண்டாம் வருடக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment