Header Ads



'17 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'

(vi) நாட்டில் சுமார் 17 பள்ளிவாசல்கள் மத வெறி பிடித்த காடையர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இவ்விடயம் வேதனையளிக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசனலி எம்.பி. தெரிவித்தார்.

மஹியங்கதவ மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மட்டுமல்லாமல் புனித ரமழான் மாதத்தில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையை நடத்தக் கூடாதென ஊவா மாகாண அமைச்சர் அனுரவிதாரன கமகே தடுத்து நிறுத்தியுள்ளார். இது மத சுதந்திரத்துக்கு சவால் விடும் செயலாகும்.

நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததனால் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினரான முஸ்லிம்கள் சன்மார்க்க கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மஹியங்கன பள்ளிவாசல் கடந்த 21வருடங்களாக முஸ்லிம்களின் தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இங்கு தொழுகையை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

17 comments:

  1. இதுவரைக்கும் தைரியமாக நீங்க கூட கண்டிக்கவில்லையே..... ஹசனலி.... இப்பதானே உங்களையே காணக்கிடைக்குது.....? 16 வரைக்கும் வராத நீங்கள் 17 வதுக்காவது வந்தீங்களே..!

    ReplyDelete
  2. Nam oru taymakkal . Pallikalai pathukapom . idallam verum mayangal.

    ReplyDelete
  3. Dear Hasan Ali,

    Do not report to Muslim web media. Talk this problem in the Parliament as you are a MP. You all just to report to Jaffna Muslims. If you all fear Allah, please take the problem to Parliament.

    ReplyDelete
  4. பிரச்சினைகள் எல்லையைத்தாண்டிக்கொண்டு போகின்றது என்பது புலப்படுகின்றது. வெள்ளம் வந்த பின் அணைகட்ட முடியாது. கைகலப்பு வரும் முன் இக்காடையர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் ஜனாதிபதிக்கு முஸ்லிம்கள் மீது தனிப்பட்ட குரோதம் மனதில் இருக்கும் காரணத்தால்தான் இவைகளுக்கெதிராக வாய்திறக்கா நிலையில் இருக்கின்றார். ஆனால் முஸ்லிம்கள் வாயும் திறக்கவில்லை மிகப்பொறுமையுடன் இருக்கின்றார்கள். ஒவ்வொரு ரமழானிலும் நல்ல நாட்களிலும் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற சங்கடங்களைத்தருவது அதுவும் சிறுபானமையினரிலும் மிகவும் குறைந்தளவு எண்ணிக்கையிலுள்ளவர்களிற்கு இதுபோன்ற அனாகரீகமற்ற இன்னல்களைத்தருவது பெளத்தர்களிடமுள்ள நல்லெண்ணத்தையும் மரியாதையும் அடியோடு அழித்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே பெளதர்கள்தான் இந்த காடையர்களுக்கு உரிய பதிலடியைக்கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  5. தேர்தல் ஆரம்பிக்க முன்னரே இவர்களது நாடகத்தை அரங்கேற்ற தொடங்கி விட்டார்களா....................?????????????????????

    ReplyDelete
  6. முஸ்லிம் காங்கிரஸ் பா.உறுப்பினர்கள் ஏன் இந்தச் செய்திகளை பாராளுமன்றத்தில் வைக்கிறார்கள் இல்லை? பேச வேண்டிய இடம் அதுதானே!

    ReplyDelete
  7. He...he....he....he....ha....ha.....ha......ho.....ho.....hooo
    What a feeling Mr. Hasan Ali!

    ReplyDelete
  8. இவர்கள்தான் முதுகெலும்பில்லாத, அரசாங்கம் போடுகின்ற அற்ப எலும்புத்துண்டுகளுக்காக சமூகத்தையே விற்றுப்பிழைப்பு நடத்துகின்ற அரதியல்வாதிகள். ஜப்னா முஸ்லிமில் அறிக்கை விடுவதற்குத்தான் இவர்கள் லாயக்கு.

    ReplyDelete
  9. நிருபர்களுக்கு அளிக்கும் பேட்டியை கொஞ்சம்
    ஜனாதிபதியுடனும் பேசலாமே.
    எல்லம் நாடகமே இன்றைய முலிம்மந்திரிமார்க்கு
    எங்கு தைரியம் அஸாத் ஸலியைப் போல் வந்து தைரயமக பேச வேணடியு தானே

    ReplyDelete
  10. Ennuom Muslim kkalai madaiyar Aakkiekondu Erupparkal
    Athai Muslim kkalum Parthukondu Erupparkal
    Poruthathu Poathum Muslimkkal Veeliethukkollunkal Muslim Arasiya Vaathikalukku Athierak
    =============Kalmunai Mohamed Fowse+++++++++++++++

    ReplyDelete
  11. வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க..!

    இப்படித்தான் எங்க ஊருக்கும் வந்து தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதை வச்சு சந்து பொந்தெல்லாம் கூட்டம் போட்டு பேசி விளாசி வாக்குக் கேட்டாங்க..

    அதில ஒரு விஷேசம் என்னான்னா.. எங்க ஊரு முன்னாள் மாகாண மெம்பரு முபீன் சார் அவுக, பாலமுனையில நடந்த இந்த மரக்காரன்க கூட்டத்தில பேசும்போது, 'பள்ளிவாசல்களை மகிந்த அரசாங்கம் உடைக்கனும்னா நீங்க எல்லாரும் வெத்திலைக்குப் புள்ளடி போடுங்க' அப்பிடீன்னும் பேசினாரு.

    அப்பிடியெல்லாம் பேசினதாலதான் கிழக்கு மாகாணத்தில் வாழுற முஸ்லிம் சனமெல்லாம் அந்த மாதிரி இவுகளுக்கு அள்ளிப் போட்டாங்க!

    ஆனா வோட்டுப் பொட்டியத் தூக்கினதோட இவுகளும் பொட்டிப் பாம்பா பதுங்கினது மாத்திரமில்ல மக்களே..இவுகளும் சேர்ந்து வெத்திலைக்கே சப்போட் பண்ணி ஆட்சியயும் அமைச்சிட்டாங்க..

    அதனால எங்க ஊரு மாஜி மெம்பரு முபீன் சாரு சொன்ன மாதிரி, இத்தன பள்ளிவாசல்களையும் உடைக்கிறதுக்கு காரணம், நாங்க மரத்துக்குப் போட்ட வோட்டுகளையெல்லாம் அவங்க மூடக்கணக்கில பெக் பண்ணி மொத்தமா வெத்திலக் கம்பனிக்கு வித்ததுதான்.

    இப்ப கிழக்குக்கு அப்பால அவங்கட சீசன் யாவாரத்துக்கு வந்திருக்காங்க1 இப்பிடியெல்லாம்தான் பேசுவாக! அறிக்கைகளை உடுவாக!!

    அதான் வந்துட்டாங்கய்யா.. மீண்டும் மக்களுக்கிட்ட வாக்குப் பிச்ச கேட்டு வந்துட்டாங்கன்னு சொல்றேன். இருவத்தஞ்சஞ்சி வருஷமா பிச்சையே வாங்கிப் பொழைக்கிற கூட்டம்பா இவுக..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  12. அப்படி என்றால் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக தேர்தலில் போட்டியிடப்போகிறது என்று அர்த்தம் அப்படித்தானே!?திடீர் தைரியம் எங்கிருந்து வந்தது உண்மை பேச?அல்லாஹ்வின் மார்க்கத்தை விட,சமூகத்தை விட வாக்கு பெரிதாகியதன் விளைவு இன்று பேசத்தூண்டுகிறது

    ReplyDelete
  13. they dont know how to talk in the pariliment.they are waiting for some ministry post

    ReplyDelete
  14. இதிலிருந்து என்ன விளங்குது அரசியல் வாதிகள் இஸ்லாத்தை விட்டும் மிகத்தூரமாக இருப்பதால் இஸ்லாமிய விடயங்களில் அவர்களின் கெடுபிடி வேண்டாம் என்பதே! ஆக நீங்கள் அணைவரும் ராஜினமா செய்து விட்டு தூய்மையான இஸ்லாத்தை தெரிந்தவர்களுக்கு உங்கள் ஆசனங்களை கொடுத்து விட்டு ஒதுங்குங்கள் இல்லாது போனால் அமிர்தலிங்கத்துக்கு ஏற்பட்ட நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

    ReplyDelete
  15. pulli vifaram tharuhireerhala VETKAMILLAI? therthalhain poothu 'URIMAYAI THATTI KAAPPOM...KATTIKAAPPOOM" ENDRU SONNEERHALE JOKKA? PAARALUMANDRU ETHUKKUP POONEERHAL?
    ENGAL PRACHCHINAIYAI PAARALUMANDRI PESI THEERVU PETRU THARUVOM ENDRU "WAAKKURUTHI" THANTHEERHALE......ETHUKKU WAAKKURUTHIYAI MEERI SAMPALAM EDUKKIREERHALE ITHANAI IMMAYILUM MARUMAYILUM IRAIVAN KEATKA MAATTAAAN ENDRA THAIRIYAMA

    ReplyDelete
  16. இவ்வளவுக்குப் பொறகும் என்னத்தப் புடுங்குறதுக்கு அதுக்குள்ள இரிக்கயள்?

    ReplyDelete
  17. pallivaasal muhmeenkalin veedu. ithil arasiyalvaathihali poattu kulappikollthirhal.muhmeen unmaiyee peasuwan. arasiyalvathi.......muhumeen allahukku payappaduwaan arasiyalvaathi........muhumeen nambikai thurooham seaiya maattan arsiyalvaathi.......so summavedunga arasiyal vaathihali.aabrahavin padail ernthu pathukaatha allhukku engalai pathuhakkatheriuum.naangal allhvin adimaihal.arasiyalvaathihal yaarudaiya adimaihal?

    ReplyDelete

Powered by Blogger.