Header Ads



கல்முனை நெனசல அறிவகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


( ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டுவரும் நெனசல ” அறிவகத்தின் ” 4வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 07.06.2013 கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

நெனசல நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாதி கான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய ஆரம்ப பிரிவிற்கான உதவி கல்விப் பணிப்பாளர் இஸட் . எம்.நதீர் மௌலவி கௌரவ அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் ,கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை நெனசல நிறுவகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளை புர்த்தி செய்த 311 மாணவ மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.


No comments

Powered by Blogger.