திருகோணமலை கடலில் புலிகளின் முக்கிய உறுப்பினர் கைது
88 பயணிகளை அழைத்து கொண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுக்கொண்டிருந்த போது கடந்த 20 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் பிடிக்கப்பட்ட டோலார் படகில் இருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கரடிப்போக்கு என்ற பிரதேசத்தை சேர்ந்த ஆரியனந்தன் பார்த்திபன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேவேளை டோலார் படகை ஓட்டிச் சென்ற நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், அவரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment