மர்ஹும் அஷ்ரபின் கனவு நனவாகிறதா..?
(எஸ்.அஷ்ரப்கான்)
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் கல்முனையில் திதுலன ஒளிரும் கல்முனை என்ற வேலைத்திட்டத்தினைக் கொண்டுவந்து 51 வேலைத்திட்டங்கள் நேற்றும்இ, இன்றும் (வியாழன் வெள்ளி) பாரிய அபிவிருத்தியின் ஆரம்ப நிகழ்வுகளால் களைகட்டியது கல்முனை மாநகர பிரதேசம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்ற வேலைத்திட்டத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்
நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் கல்முனை, கல்முனைக்குடி, நட்பிட்டிமுனை, சாய்ந்தமருது கல்முனை தமிழ் பிரிவு போன்ற இடங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் மிக முக்கியமான விடயம் அரசியல் ரீதியில் ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கழைந்து ஒற்றுமையாக பாராளுமன்ற உறுப்பினரோடு கைகோர்த்து நின்று இன்று மக்களுக்காக களமிறங்கியுள்ளமையை பார்க்கின்றபோது, மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் கல்முனை அபிவிருத்தி கனவு நனவாகும் காலம் கனிந்து விட்டதாக மக்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. அதுபோன்று எதிர்காலத்திலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் அபிவிருத்தி விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருப்பதை உணர முடிகிறது.
மிக நீண்டகால கல்முனை அபிவிருத்தி பின்னடைவை தீர்த்து பல்வேறு துறைகளிலும் பாரிய அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்முனைப்பிரதேச மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட நோக்கம் முஸ்லிம் உம்மாவை ஐக்யப்படுத்தி ஒரே தலைமையின் கீழ் கொண்டுவருவதுதான் . ஆனால் அந்த கட்சியை உதாரணமாக கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் பல சிறு சிறு கட்சிகளையும் , பிரிவினையையும் ஏற்படுத்தி சுகம் காண்பதே வேதனையாயிருக்கிறது
ReplyDeleteஉரிமைகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட கட்சி இன்று உரிமைகளை இழந்த நிலையில் அபிவிருத்தியின் பக்கம் திசை திருப்பப்பட்டுள்ளது.
ReplyDeleteஅபிவிருத்தித் திட்டங்களில் அரசியல்வாதிகள் கருத்து வேற்றுமை பாராது ஒன்றித்துச் செயற்படுவதன் மர்மம் அதில் கமிஷன் சிஸ்டம் மேல்மட்டம் முதல் அடி மட்டம் வரை இருப்பதனால்தான்.
எப்படியோ ஒளிரட்டும் கல்முனை.! எமதூரில் இருப்பதைப்போல் அங்கும் ஈச்சை மரங்கள் நடு வீதியில் நாட்டப்படுமா?
மர்ஹும் அஸ்ரப் அவர்களின் கனவு கல்முனை மாத்திரமல்ல முஸ்லிம் சமூகம் முழுவதும் ஒளி பெற வேண்டும் என்பதுதான்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
அஸ்ரபின் கனவை நனவாக்கவில்லை,அஸ்ரபின் பெயரை வைத்து அரசியல் வியாபாரம் என்பதை விட விபச்சாரம் செய்கிறார்கள் என்றால் பொருத்தம்,,,,13வது திருத்த நீக்கம் வருகிறது அதன் தெரிவுக்குழுவில் ஆட்சியின் பங்காளி மு.கா.வுக்கு இடமில்லை ...தப்பிக்கும் முயற்சியாக லீடர் ஜனாதிபதியுடன் டீல் முடித்து விட்டாரோ (பணம் ,பதவி)? ..அஸ்ரபின் பெயரிலேயே அரசியல் செய்யும் பச்சோந்திகள் அவர் பெயர் கொண்ட ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு,ஒளிரும் கல்முனை 51 வேலை திட்டங்களில் அரை சதமேனும் ஒதுக்காதது விந்தையே...
ReplyDeleteதலைமைத்துவத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டு எம் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள். ஆனால் இன்று தலைமத்துவம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தலைமைதாங்கி கொண்டுசெல்லும்போது அந்த சமூகத்தில் பிளவுகளும் பிரிவுகளும் அதிகரித்து தேல்வியே கிடைக்கின்றது..
ReplyDelete