Header Ads



ஆங்கிலம் கற்குமாறு விமல் வீரவன்சவுக்கு பொதுபல சேனா உபதேசம்



நோர்வே தூதரகத்தின் அறிக்கைகளை வாசிப்பதற்கு முன்னர் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் என்று, பொதுபலசேனா பதிலடி கொடுத்துள்ளது. 

பொது பல சேனாவுக்கு நோர்வே நிதியுதவி வழங்குவதாக விமல் வீரவன்ச கூறிய குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்த பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்து ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார். 

“நோர்வே தூதரக அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விமல் வீரவன்சவும் அவரது ஆலோசகர்களும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. 

இவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார். pp

No comments

Powered by Blogger.