Header Ads



ஆஸாத் சாலியை என்ன செய்ய போகிறார்கள்..?

ஆஸாத்  சாலி 02-05-2013 காலை 7 மணியளவில் கொலன்னாவையிலுள்ள வீடொன்றில் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்டார். 

நாட்டிலுள்ள சட்டப்படி இவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். விசாரணை முடிவிலே இவரை தடுத்து வைத்து விசாரிப்பதா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதா? என முடிவு செய்யப்படும் என பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் இன்று சனிக்கிழமை, 4 ஆம் திகதியுடன் ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலமாகிவிட்டது

இந்நிலையில் ஆஸாத் சாலியை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவாரா..? அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவாரா? இல்லையேல் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்விகள் மேலோங்கியுள்ளன..! 


2 comments:

  1. கொலை செஞ்சவனெல்லாம் சும்மா சுத்தி திரியிரானுகள்.....

    ReplyDelete
  2. we all should pray for our future muslim leader asad sali

    ReplyDelete

Powered by Blogger.