படை வீரர்கள் மாதம் பிரகடனம்
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
படை வீரர்களை நினைவுகூறும் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் =அலரி மாளிகையில் பிரகடனப்படுத்தப்பட்டது.
2008 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி மன்னாரில் உயிர்த் தியாகம் செய்த மேஜர் உடுகமவின் மகள் ஜனாதிபதிக்கு படை வீரர்கள் நினைவான முதல் கொடியை அணிவித்தார்.
படை வீரர்களின் குடும்பங்களின் நலன் கருதி ஜனாதிபதி ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விருதும் வழங்கப்பட்டது.
கடந்த வருடம் கொடிகள் விற்பனையில் கிடைத்த நிதி ஜனாதிபதியிடம் கையளி;க்கப்பட்டதோடு அந்த நிதியை படை வீரர்களின் நலனுக்குப் பயன்படுத்தும் வகையில் உரிய அதிகாரிகளிடம் கையளிக்க்ப்பட்டது.
இந்த வைபவததில் பிரதமர் தி.மு. ஜயரத்ன- பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ-மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மௌலானா உட்பட சகல மாகாண ஆளுநர்களும் படை வீரர்களின் நலன்புரி அமைப்பின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


Post a Comment