Header Ads



உலகில் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுபெறும் பிலால் ஹபீப்

உலகில் கல்வி, கலச்சாரம், அறிவியல்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது. இங்கு 27-30 தேதி வரை யுனெஸ்கோ அமைப்பின் நிகழ்ச்சிகள் நடந்தன.  

 அப்போது யுனெஸ்கோ அமைப்பின் இளம் விஞ்ஞானிகளுக்கான 6 விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவை சேர்ந்த பிலால் ஹபீப் என்ற உத்தரகாண்ட் இளைஞரும் ஒருவர். 

சுற்றுச்சூழல் கண்காணிப்பு குறித்து அவரின் ஆராய்ச்சிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவருக்கு 5000 டாலர் பரிசும் அளிக்கப்படும். மேலும் மனிதன் மற்றும் உயிர்க்கோள திட்டத்தின் அமைப்பும் கூடுதல் பரிசை வழங்கும்.

1 comment:

Powered by Blogger.