Header Ads



10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது


10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் பூத்துள்ளது.

 மற்ற நறுமணம் வீசும் மலர்களைப் போலன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரும் இந்த 'டைட்டன் அரும்' மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான்.

 பூப்பு காலத்தில் 'டைட்டன் அரும்' செடி நாளொன்றுக்கு 10 செ.மீட்டர் வரை வளரும். முழு பூப்பை அடைந்த மலர் 48 மணி நேரத்திற்குள் சுருங்கி இறந்து விடும்.

 இந்த மலரின் அழகை ரசிப்பவர்கள் அது வெளிப்படுத்தும் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டுதான் பார்க்க வேண்டும். அழுகிப்போன இறைச்சி, சானம், கெட்டுப்போன பாலாடைக் கட்டி ஆகியவற்றின் முக்கூட்டு கலவையாக இந்த மலரின் துர்நாற்றம், எவரையும் முகம் சுளிக்க வைத்து விடும்.

No comments

Powered by Blogger.