தவ்ஹீத் ஜமாத்தின் கொம்பனி தெரு பொதுக் கூட்டம் தடையானது ஏன்..?
(ரஸ்மின் MISc
துணை செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நேற்றைய தினம் கொழும்பு, கொம்பனி வீதியில் இனவாதிகளின் இஸ்லாம் மீதான குற்றச் சாட்டுக்களுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. அதே நிகழ்சி நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
தவ்ஹீத் ஜமாத்தின் கொம்பனி தெரு பொதுக் கூட்டம் தடையானது ஏன்?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக (06.04.2013) கொழும்பு கொம்பனி தெருவில் நடத்தப்படவிருந்த மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் அரசினால் தடை செய்யப்பட்டு இறுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
நடந்தது என்ன?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக மூன்று தலைப்புக்களில் கொழும்பு கொம்பனி தெரு ஹோலிரோஸரி மகா வித்தியாலயத்துக்கு முன்னால் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அபே உறுமய ரெககனிமு என்ற தலைப்பில் சிங்கள மொழியில் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக், சதி வலையில் சிக்குமா முஸ்லிம் சமுதாயம்? என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான், வஹாபிஸம் தீவிரவாதமா? என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த (05.04.2013) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தை சந்திப்பதற்காக வருகை தந்த அமைச்சின் உயர் அதிகாரிகள் தற்காலிகமாக நிகழ்ச்சியை நடத்துவதை நிறுத்தும் படி நிர்வாகத்தை வேண்டிக் கொண்டார்கள். சுமார் நான்கு மணி நேரங்கள் நடை பெற்ற இந்த சந்திப்பில் பேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி அவர்கள் சில செய்திகளை முன் வைத்தார்.
‘இந்நிகழ்ச்சி நடப்பதினால் சில விரும்பத் தகாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.”
‘இந்த நிகழ்சியை அதே இடத்தில் வேறு ஒரு நாளில் நடத்துவதற்கு நாங்கள் அனுமதி தருகின்றோம்.”
‘இன்றைக்கு இந்நிகழ்ச்சியை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துங்கள்.’ என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார் அப்போது அவருடன் பேசிய ஜமாத் நிர்வாகிகள் “நாங்கள் எங்கள் ஜமாத் நிர்வாகத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்களாக எந்த முடிவையும் சொல்ல முடியாது மஷுரா செய்துவிட்டு சொல்கின்றோம்” என்று செய்தியை சொல்லி அனுப்பினார்கள்.
06.04.2013 காலை கொழும்பு போலிஸ் தலைமையத்திற்கு சென்ற நமது நிர்வாகிகள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக பேசினார்கள். அப்போது பேசிய போலிஸ் தலைமை அதிகாரி ‘இன்றைக்கு நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை நிறுத்துங்கள் கண்டிப்பாக அதே இடத்தில் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளில் நடத்துவதற்கு உங்களுக்கு கட்டாயம் அனுமதி தருகின்றோம்’ என்று வாக்குறுதியளித்தார்.
உடனடியாக கூடிய ஜமாத்தின் தலைமை நிர்வாகம் பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்துக்கினங்க 06.04.2013 நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்துவதென்றும் அதே தலைப்புக்களை ஜமாத்தின் தலைமையத்தில் இன்றே நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதைத் தொடந்து இன்று மாலை சரியாக 6.45 க்கு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இனவாதம் பரப்பும் பொது பல சேனா மற்றும் அது போன்ற அமைப்புக்களின் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் சொல்லும் விதமாக நடத்தப்படவிருந்த இந்த நிகழ்ச்சி பொதுக் கூட்டம் தடை செய்யப்பட்டாலும் அதே நிகழ்ச்சி எவ்வித குறைபாடுகளும் இன்றி ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
தடை செய்யப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு பதிலாக வெற்றிகரமாக நடைபெற்ற உள்ளரங்க நிகழ்ச்சி.
இன்று 06ம் தேதி கொழும்பு கொம்பனித் தெருவில் நடைபெறவிருந்த நிகழ்சியை அரசு தடை செய்ததைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சி மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இனவாதம் பரப்பும் பொது பல சேனா மற்றும் அது போன்ற அமைப்புக்களின் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் சொல்லும் விதமாக நடத்தப்படவிருந்த இந்த நிகழ்ச்சி பொதுக் கூட்டம் தடை செய்யப்பட்டதென்பது விரும்பத்தகாத ஒன்றுதான். ஆனாலும் நமது திட்டமிடலில் சிலவேளை சறுக்கல் உளதோ என்று எண்ணத்தோண்றுகிறது. விளக்கமளிக்கப்படவேண்டியது யாரூக்கு நமது சமுகத்திற்கா அல்லது அவதூறு கூறும் சேனாக்களுக்கா.? சேனாக்களுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியானால் அதற்கேற்றவாறு நாம் திட்டமிட்டு அதிகாரவர்க்கத்தினரூடாக அநுமதியைப் பெற்றபின் பொது அறிக்கை விடவேண்டும். அறிக்கையை விட்டு விட்டு அனுமதி கேட்பதென்பது முட்டிய பின் குனிவது போலாகி விட்டது. அன்றியும் இந்நிகழ்ச்சியை தனியொரு இயக்கமாக முன்னெடுக்காமல் வேறுபாடுகளைக்களைந்து மற்ற இயக்கங்களையும் இணைத்து நன்கு ஆய்ந்து ஆலோசித்து திட்டமிட்டிருந்தால் ஒருவேளை எமது எண்ணம் ஈடேறி சேனாக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியதை தெளிவு படுத்தும் வாய்ப்பு கிட்டியிருக்குமோ என்னவோ? மீண்டும் முயற்சிப்போம் அதில் வெற்றியும் பெறுவோம்.
ReplyDeleteவீடு எரியும் பொழுது சுருட்டு புகைக்க நெருப்பு எடுக்கும் இந்த குழப்பவாதிகள் இலங்கை
ReplyDeleteமுஸ்லிம்கள் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்
கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்களது வஹ்ஹபிச கொள்கைகளையும் சமூகத்தில் புகுத்த
தக்க தருணம் இது தான் என மேடை கட்ட நினைத்தவர்களிடமிருந்து அல்லா சமூகத்தை பாது
காத்தான் இந்த பரிசுத்தவான்கள் தான் இந்தியாவிலும் இலங்கையிலும் தூய இஸ்லாத்தின்
பெயரால் முஸ்லிம்களை கொன்றவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தங்களுக்கு என
வேறு பள்ளிகளை கட்டி முஸ்லிம்களை பிளவு படுத்தியவர்கள் ஊரில் ஜும்மா இருக்க
வீடுகளில் ஜும்மா தொழும் ஒரு புதிய நடை முறையை உருவாக்கி சமூகத்தை இன்னும் பிளவு
படுத்துபவர்கள் புலி பசு வேடம் போடுகிறது முஸ்லிம்களே எமது சமூகத்தில் உள்ள இந்த பொது
பல சேன விடயத்திலும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்