Header Ads



முல்லைத்தீவில் பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு



முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (2013.04.6) மக்களிடம் கையளித்துள்ளார்.

கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து,தபாலக மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

நெடுங்கேணி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தை தொகுதி மற்றும் புதிய பஸ் தரிப்பு நிலையம் என்பனவும் இவற்றில் உள்ளடங்குகின்றன.முல்லைத்தீவு நகரில் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு சந்தை ஆரம்ப நிகழ்விலும்,அதனையடுத்து வெட்டு வாய்க்கால் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,முல்லைத்தீவு மஹா வித்தியாலயம்,மாஞசோலையில் அமைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கான மகப்பேற்று பிரிவு,குழந்தை பராமரிப்பு பிரிவு கூடம் ,குமுழமுனை பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வு  என்பனவற்றையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார்.

அதே வேளை 11 மில்லியன் ரூபா செலவில் ஒட்டுச் சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன்,முல்லை அரசாங்க அதிபர் என்.வேதநாயகம்,ஜனாதிபதியின் முல்லை மாவட்ட இணைப்பாளர் கணகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.