Header Ads



பாகிஸ்தானிலிருந்து வந்த கருத்தடை ஊசி மருந்தின் பின்னணி குறித்து ஆராயவும்..!


பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30,000 கருத்தடை ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதானது பாரதூரமான விடயமாகும். எனவே இதன் பின்னணியில் யார்? எந்த அமைப்பு உள்ளது என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

இல்லாவிட்டால் சிங்கள இனத்தை அழிக்கும் சதித்திட்டம் வெற்றி பெற்று விடுமென்று அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பொதுபலசேனாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,

இக்கிழங்குக் கொள்கலன்களை பாகிஸ்தானியர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார். அதற்குள்ளேயே 30000 கருத்தடை ஊசி மருந்துகள் கொண்டு வரப்பட்டமையை சுங்கத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறு கருத்தடை மருந்துகள் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். சிங்கள இனத்தை அழிப்பதற்கும் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கும் மிகவும் சூட்சுமமாக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை நாம் வெளியிட்டோம். ஆனால் அரசாங்கமோ அல்லது வேறு எவரும் கண்டுகொள்ளவில்லை. இன்று அது நிரூபணமாகியுள்ளது.

எனவே இந்தக் கருத்தடை மருந்து ஊசிகள் எந்த மருந்தகத்திற்காக கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள அமைப்பு எது? பாகிஸ்தானிய பிரஜை யாருக்காக இதனை கிழங்குக் கொள்கலன்களில் மறைத்துக் கொண்டு வந்தார். என்பது தொடர்பில் உளவுப் பிரிவினர் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி இச் சதியின் சூழ்ச்சிக்காரர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள இனம் அழிவதை தடுக்க முடியாது. வெறுமனே பாகிஸ்தான் பிரஜைக்கு தண்டப்பணம் அறவிட்டு விடுதலை செய்வதால் எதிர்காலங்களிலும் இவ் ஆபத்து தொடர்ந்த வண்ணமே இருக்குமென்றும் லிலந்த விதானகே தெரிவித்தார்.

6 comments:

  1. hallo bbs neengala vayttuvettu neengala kandupdettullergal iddayyallam nangal cinemavel parttuveddom yar sonnadu U S A soledandadu ippadisayyasole

    ReplyDelete
  2. நாட்டில் என்ன நடந்தாலும் அதை சிங்கள இனத்தை அழிப்பதற்காக என்று பொதுபலசேன சொல்லிக்கொண்டிருப்பது அவர்களின் படிப்பறிவற்ற நாகரீகமற்ற தன்மையைத்தான் வெளிக்காட்டுகின்றது, நாட்டில் எத்தனையோ பேர் குற்றம்செய்கின்றார்கள் உதாரணமாக் பொதுபலசேன போன்ற கள்ளத்தனமான பெளத்த சட்டப்படி தேரர்களாகாமல் தாம் தேரர்கள் என்று சொல்லி காவி உடை அணிந்த எத்தனையோ பேர் சிறுவர் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள், பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள், களவு செய்கின்றார்கள் நாங்கள் யாரும் சொல்கின்றோமா ஒட்டுமொத்த பெளத்தர்களும் செய்கின்றார்களென்று அல்லது நாங்கள் வாய்திறக்கின்றோமா இதுபற்றி முஸ்லிம்கள் நாம் ஒருபோதும் வாய்திறக்கவில்லை காரணம் மற்றவர்கள் குண்டியைக்கழுவ எங்களுக்கு நேரமில்லை நாங்கள் எங்கள் குண்டியைமடும் கழுவ நினைஇக்கின்றோம்.

    ஆக பொதுபலசேன வழமைபோல திருடர்கள்தான் சட்டவிரோதமான பயங்கரவாதிகள்தான் இதில் மாற்றமில்லை. நீங்கள் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு அமைச்சருக்கு கட்டளையிட நீங்கள் யார்? இதுவரைக்கும் நாட்டின் அமைதியைக்குழப்பியதுபோதாதா? உங்கள் அண்டவாளங்கள் தண்டவாளங்களுக்கு வந்தபின்பும் என்ன வீணான அறிவித்தல்கள்,

    பொண்ணையர்கள் பொதுபலசேனவே வாயை மூடி உன்வேலையை மட்டும் கவனி வீணாக மீண்டும் மீண்டும் முஸ்லிம்களிடம் உன் முட்டாள்தனமான விளையாட்டுகளைக்காட்டாதே பொதுபலசேனவில் உள்ள உறுப்பினர்கள் செய்த கொள்ளைகளும் காடைத்தனமும் பாலியல் பலாத்காரங்களும் இதுவரை சிங்களமக்களினால் வெளிக்காட்டப்பட்டது பொதாத நாட்டிலுள்ள அனவரின் எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டது போதாதா இன்னும் அனைவரு உம்மை ரோட்டில் போட்டு மிதித்தும் உம்போன்ற காடையர்களின் கொட்டம் அடங்கவில்லையா, இன்னும் அடக்கவேண்டுமா.

    ReplyDelete
  3. Arandavanukku irundadellam Peyam.

    ReplyDelete
  4. BBS eppady adu singala enatha alika konduwanthanu sollalam loosaaaa

    ReplyDelete
  5. May be this brought to BBS. Bcoz they have illegal wives. so they can use it for them for not to pregnent.

    ReplyDelete

Powered by Blogger.