குவைத்தில் 6 வருடங்களுக்கு பின்னர் 3 பேருக்கு தூக்குத் தண்டனை
குவைத்தில் கடைசியாக 2007-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று குவைத் மத்திய சிறையில் 3 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் ஒருவர் சவூதியர், ஒருவர் பாகிஸ்தானியர் மற்றொருவர் அரேபியவர் ஆவர்.
இதில் பாகிஸ்தானியர் குவைத்தை சேர்ந்த ஒரு ஜோடியை கொன்றதற்காகவும், சவுதியர் சக நாட்டவரை கொன்றதற்காகவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரேபியர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொன்றதற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் 44 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. குவைத்தில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கே அதிகம் மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Post a Comment