மௌலவி சுபியான் ஏற்பாட்டில் ஆயுர்வேத மருத்துவ முகாம்
(பா.சிகான்)
யாழ் மா நகர சபை பிரதேசத்திற்கு உட்பட்ட நாவாந்துறை பிரதேச மக்களுக்காக ஆயுர்வேத மருத்துவ முகாம் அண்மையில் யாழ் மாநகர சபை உறுப்பினரும், அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான பி.எஸ் சுபியானினால் செந்நீக்கலஸ் சன சமூக நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.சுமார் 50 க்கும் மேற்பட்ட மக்கள் இதன்போது பயனடைந்தனர்.சகல விதமான வாதங்கள்,சரரோகம்,தோள் வியாதிகள்ஈ மூட்டு உழைவு உட்பட பல நோய்கயுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. அதன்போது சிகிச்சை பெற வந்திருந்த மக்களிடம் நாவாந்துறை யில் ஆயுள் வேத வைத்திய நிலையத்தை ஆரம்பிப்பதற்கு தனக்கு சபையின் அங்கீகாரம் கிடைத்த போதிலும் பொருத்தமான இடத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தற்போது மேற்படி இந்நிலையத்தில் ஆரம்பித்து வைத்ததாக தெரிவித்ததுடன் தொடர்ந்து இது நடமாடும் சேவையாக இப்பகுதியில் நடைபெறும் என்றார்.


Post a Comment