Header Ads



வைக்கோற் பட்டறை மிருகம்...!



(Shifaan BM)

கட்டாயம் இன்றைய காலகட்டத்தில் இந்த தலைப்பில் எழுத வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கின்றது. அதிலும் இன்றைய நாளில் 25-03-2013 நடந்த  ஓர்  அற்பமான நிகழ்வை ஒட்டி இதனை சமூகத்தின் முன் கொண்டுவர எண்ணுகிறேன். 

ஆம் இன்று இரவு 10.00 மணியளவில் ஓர் கல்விமானின் இதயக் குமுறலையே நான் இங்கு கொண்டு வர விளைகின்றேன். ஊடகங்கள் அதன் தர்மத்தில் நின்று கொண்டு செயற்பட வேண்டிய கால கட்டத்தில் அதன் தர்மத்தினை மீறி செயற்படும் அக்கரைப்பற்றை  மையமாக கொண்டு செயற்படும் ஓர் அரச ஊடகத்தின் அசமந்த போக்கையே நான் சுட்டிக்காட்ட முனைகின்றேன். 

தினமும் லண்டனை மையமாக  கொண்டு இயங்கும் லண்டன் பி.பி.சி பெட்டக நிகழ்சிகளை நேர்மையாக  ஒலி பரப்புவது வழமை. அதிலும் இன்றைய நிகழ்ச்சியை  ஒற்றுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களும் கேட்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் ஓர் இறை கொள்கையில் உள்ள சமூகம் ஒன்று பட்டு ஒருமித்த குரலில் ஹர்த்தால் அனுஷ்டித்து அடிப்படை வாதிகளுக்கு மரணத்துக்கு பயப்படாத சமூகம் நாங்கள் என்று மார்தட்டி கடையடைப்பு  செய்து  ஒற்றுமையை வெளிப்படுத்திய  தினம்  என்பதால்  ஆகும். 

இவ்வாறு இன்று சிங்கள முஸ்லிம்கள் மத்தியில் உள்ள விரிசல்களை , கடையடைப்புக்கான காரணங்களை பி.பி.சி தொகுப்பாக சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது மக்கள் ஆக்ரோசமாகவும் , நிதானமாகவும் பதிலளிப்பது வழமை. 

ஆனால் இடைக்கிடையே அதனை பொறுத்துக் கொள்ள முடியாத எப்.எம் (அநேகமான  முஸ்லிம் நாடுகள்  இதன்  பெயரையே  சின்னமாக  பயன்படுத்துகின்றன .) வைக்கோல்  பட்டறை நாய்  போன்று  செயற்பட்டு  சுமுகமாக உள்ள தமிழ்  முஸ்லிம் உறவுகள்  சம்மந்தமாக அறிக்கை வெளியிட்டு   இடையூறு  விளைவித்தமை  மிகவும்  கேவலமான செயற்பட்டகும். 

  இவ்வூடகத்தின்  தர்மத்தினை எவ்வாறு மெச்சுவது? இது தானா ஊடக தர்மம்.? நீங்கள் தான் உண்மையை அப்பட்டமாக புரட்டி சொல்லுகிறீர்கள் என்றால் உங்களுக்குள்ள கட்டுப்பாடு அது என்றால் உண்மையை சொல்லும் ஊடகத்தை ஆவது அதன் பாட்டில் விடுங்கோவன். ஏன் அதையும் புகுந்து பளிங்குக் கடையில் பைத்தியம் பிடித்த எருதுபோல் நுழைந்து கெடுக்கிறீர்கள்? 

மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு செயற்படும் கனவான்களே இனியாவது இது போன்ற செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். உண்மையை சொல்லுபவர்களையாவது அவர்கள் பாட்டில் விட்டு விடுங்கள்.அதற்காக இடையில் புகுந்து குலைத்ததற்காக உங்களுக்கு விருதுகள் தரப்போவதில்லை. உங்கள் சந்தர்ப்பமும் நேரமும் வரும் போது உங்கள் செய்தியை நா கூசாமல் சொல்லுங்கள். சில பாமரர்கள் உங்கள் செய்தியை இன்னும் நம்பியிருக்கிறார்கள் என்பதனையும் கவனத்தில் கொள்ளுங்கள். எவ்வளவு தான் நீங்கள் முனைந்தாலும்  உண்மை எந்த வடிவிலாவது  ஒரு  நாள்  வெளிச்சத்துக்கு  வந்தே  தீரும்  என்பதனையும் நினைவில்  கொள்ளுங்கள் .


2 comments:

  1. இவ்வாறு முள்ளந்தண்டு அற்றவர்களாக இவர்கள் இருப்பதற்கு காரணம், ஈமானிய பலம் இவர்களிடமில்லை. உலக ஆசை அதிகம், மரணபயம் அதிகம். மூமின்களின் உயிரை சுவர்க்கத்தைக் கொண்டு விலைக்கு வாங்கி விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். பெறுமையாக இருங்கள் என்று கூறும் அல்லாஹ், பழிக்குப்பழி வாங்குவதில் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது என்றும் கூறுகிறான். இவர்களோ கூனி, குறுகி தொல்லைகள் இல்லாமல் வாழ்ந்துவிட்டுச் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். சோதனைகள் இன்றி சுவர்க்கம் சென்றுவிடலாம் என்றா இவர்கள் நினைக்கிறார்கள் என்றும் அல்லாஹ் கேட்கிறான். இந்த கூஜா தூக்குவதெல்லம், உயிர்போய்விடும், பொருள்போய்விடும், மனைவி மக்கள் போய் விடுவார்கள் என்ற பயத்தினால்தான். இஸ்லாம் நிலைப்பதற்கு எத்தனை தியாகிகள் தங்களது இன்னுயிரைக் கொடுத்தார்கள் என்பதை, இஸ்லாமிய வரலாறுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எனவே, உண்மைகளை மறைக்காதீர்கள். அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆகவேண்டும். அவன் கேள்வி கேட்பதில் மிகவும் தீவிரமானவன் என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். (குர்ஆனின் வசனங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். தவறு இருப்பின் திருத்திக் கொள்ளுங்கள்). அல்லாஹ் போதுமானவன்.

    (அலைகள் ஓய்ந்த பின் நீராடலாம் என்று நினைப்பது மடமையிலும் மடமை)

    ReplyDelete
  2. unmayanaana vidayam..bbc un naduwe SLBC kurukkittu makkalai ematra muyatchiththaarhal.. aanaal aneamaanor ithai purinthu konduwittarhal..bodu bala sena wai patriya nihalchi BBC in oliparappahum pothu SLBC athatku pathilaaha oru poi yai SLBC parappinaarhal

    ReplyDelete

Powered by Blogger.