மீனவர்களிடம் பிடிபட்ட 8 அடி நீளமான மலை பாம்பு (படங்கள் இணைப்பு)
(ஜே.எம்.ஹபீஸ்)
பொல்கொல்லை நீர்தேக்கத்தில் நீர் திறந்து விடப்பட்ட போது மலைப் பாம்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு இளைஞர்களால் அது பிடிக்கப்பட்டது.
கட்டுகாஸ்தோட்டை நவயாலதென்னை என்ற இடத்தில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலரே அதனைக் கண்டு பின்னர் பாதுகாப்பாக அதனைப் பிடித்துள்ளனர்.
கட்டுகாஸ்தோட்டைப் பொலீஸார் அதனை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளர். இது சுமார் 8 அடி நீளம் கொண்டது.




Post a Comment