Header Ads



இலங்கையில் புகைத்தலால் வருடாந்தம் 21 ஆயிரம் பேர் உயிரிழப்பு


(Nf) இலங்கையில் புகைத்தலால் வருடாந்தம் 21ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.

சுந்திரத்திற்கு பின்னரான 60 வருடங்களில் மாத்திரம் புகைத்தலால் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

புகைத்தலால் ஏற்படுகின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம் ஏற்படுகின்ற கரு கலைவுகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.