Header Ads



ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை ஏற்கமாட்டோம் - அரசாங்கம் அறிவிப்பு


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்காதென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் இன்று (28) பிற்பகல் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்:

ஒரு சமயத்துக்கு உரிய ஒரு பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்பதென்பது ஒரு பொருத்தமான நடவடிக்கை அல்ல.  ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்பது முறையல்ல என்று மல்வத்தை பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது சில குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அர்த்தம் அற்ற பாவகரமான ஒரு நடவடிக்கையாகும். இப்பிரச்சினை தொடர்பில் இன்று அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரனவக்கவுடன் சுமுகமாகப் பேசிக்கொண்டிருப்பதை நான் அவதானித்தேன் என்றும் அமைச்சர் கூறினார்.

4 comments:

  1. நாங்க என்னடா செய்ய? தீர்வைச் சொல்லுங்கடா

    ReplyDelete
  2. pora poka patha indaki nalaki eangada nakum
    thadamarum pola.
    ippave thudikudu.

    ReplyDelete
  3. ஆப்பு இழுத்த குரங்கின் கதையாக அரசின் நிலை பொதுபலசேனையை தூண்டி பின்னனியில் இருந்து செயல்பட்டு ஆழம் தெறியாமல் ஹலால் விடயத்தில் பலசேனையை கைவைக்க வைத்து இப்போ வெண்டோல் நிறுவனம் முதல் தேயிலை நிறுவனங்கள்வரை அரசிடம அழுதுபுலம்பவும் ஏன்டா கைவைதோம் ஏன்டா தூண்டிவிட்டோம் என்ட கதையாக அரசு ஏதேதோ சொல்லி தப்பிக்க பார்கிறது ஸ்ரீலங்காவில் இருந்து வரும் எல்லாமே ஹராமானதே தேயிலை உட்பட என்பதே 59 நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் பேசிகொள்ளும் சமகால செய்தி!!! மீண்டும் தங்க தாம்பாளத்தில் வைத்து ஹலால் சேவையை தொடருமாறு ஜ்ம்மியாவின் காலடிக்கி ஏற்றுமதி நிறுவனங்களின் அழைப்புகள் அழைபோதுவதட்கு மாதங்கள் ஆக போவதில்லை

    ReplyDelete
  4. Its not a responsible answer hon.minister.

    ReplyDelete

Powered by Blogger.