Header Ads



ஈஸா நபிக்கு பிறந்ததின வாழ்த்து தெரிவித்துள்ள வழிகெட்ட ஹிஸ்புல்லா அமைப்பு


(செய்தி மூலம் - ஷியா சார்பு ஊடகம்)

நபி ஈஸா (அலை) அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஹிஸ்புல்லாஹ் போராட்ட அமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. 

இத்தினத்தை முன்னிட்டு அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகெங்குமுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாக வேண்டுமெனவும், சமத்துவமும் சகோதரத்துவமும் உலகில் நிலைபெற வேண்டுமெனவும், ஒழுக்கம், ஏகத்துவம் மற்றும் நட்புறவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதி உலகில் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

மானுடத்தின் இறைத்தூதரான ஈஸா (அலை) அவர்களது பிறப்புடன் உலகம் பிரகாசமடைந்ததுடன், மானுடத்தின் விடுதலைக்கும் வழி பிறந்தது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

காஸாவில் அவலங்களை அனுபவித்து வரும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை நினைவுகூர்ந்துள்ள அவ்வறிக்கை, பலஸ்தீனிலுள்ள முஸ்லிம்களின் அபாயகரமான நிலை, ஈஸா (அலை) அவர்களின் போதனைகள் நிராகரிக்கப்பட்டதன் விளைவாகும் எனவும் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளே வறிய பலஸ்தீன மக்கள் மீது சியோனிசத்தினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.