Header Ads



கமலின் 'விஸ்வரூபம்' க்கு இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை


"விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும். இல்லையேல் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும்' என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள,"விஸ்வரூபம்' படம், இம்மாதம், 11ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக, டி.டி.எச்., வசதி மூலம், "டிவி'யில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படப் பிரச்னை தொடர்பாக, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா கூறியதாவது:

"விஸ்வரூபம்' படத்தின், "டிரைலர்' வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது, படத்தில், இஸ்லாமியர்களுக்கு புறம்பான காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என, சந்தேகம் ஏற்படுகிறது.

இதனால், இப்படத்தை எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு, பிரத்யேகமாக திரையிட்டுகாட்ட வேண்டும் என, கேட்டோம். எங்களின் ஐயத்தை போக்கவேண்டிய நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். படம் வெளியாவதற்கு முன்பாக, எங்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். இல்லையென்றால், பட வெளியீட்டிற்கு, ஜனநாயக வழிகளில், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு, முகமது ஹனீபா தெரிவித்தார்.

2 comments:

  1. காஷ்மீரில் தினம் தினம் சாகடிக்கப்படும் எமது சொந்தங்கள் பற்றி எங்கும் மூச்சு விடாத இவர்கள் இலவசமாக விஸ்வரூபம் பார்க்க முனைவது கேலிக்கூத்து. விஸ்வரூபத்திட்கு இலவச விளம்பரம் செய்கிறார்கள். இன்றுவரை அதிகமான மொழிகளில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்துவிட்டன அவற்றையெல்லாம் இவர்கள் என்ன செய்தார்கள் அப்பொழுதெல்லாம் ஞானம் பிரக்கவில்லையோ....? இதுவும் அரசியல் விளையாட்டே ...... இப்படிப்பட்ட சினிமா இஸ்லாத்தில் தடை ஹராம் என்று இருக்கும் போது அதில் அவர்கள் எதைக்காட்டினால் எமக்கு என்ன நாமே இஸ்லாத்தை 100% பின்பற்றுவதில்லை.... பின்னர் எப்படி.....? முதலில் எம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும். இன்று இந்தியாவில் நடக்கும் இதே கூத்து எமது ஸ்ரீ லங்கா விளும் படம் வந்தவுடன் நடக்கும். நாம் எம்மை கேவலமாக அடையாளம் காட்டுகிறோம்... முன்மாதிரி சமூகம் என்ற நிலை மாறி பின் மாதிரி சமூகமாகிவிட்டோம். இதைவிட பெரிய பூதாகார பிரச்சினைகள் எம்முன் இருக்கின்றன அவற்றை தீர்க்க வழி தேடுவோம்... அல்லாஹ் எமக்கு என்றும் நேர்வழி காட்டுவானாக ஆமின்..

    ReplyDelete
  2. nanba awarukku mudiyumana muraiyil awar thadukka munaihirar.ungalukku mudiyumanal neengal thadungal or thaduppawarhalai vittu vidungal.hasbunallah

    ReplyDelete

Powered by Blogger.