Header Ads



நான் உண்பதற்காக மாத்திரமே வாய் திறக்கிறேன் - சண்டித்தன அமைச்சர் மேர்வின்

புயல்களை போல எனக்கு சவால்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் என்னால் வெற்றிக்கொள்ள முடிந்தது. என்று தெரிவித்த பொதுமக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தன்னுடைய கரங்கள் இரத்தக்கறை படையாதவை என்றும் இனியும் தனது கரங்களில் இரத்தக்கறை படியாது. என்றும் தெரிவித்தார்.

களனியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. புயலாக வந்த சவால்களை எல்லாம் சமாளித்தேன். மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை. கொந்தளிக்கும் கடல் இருந்தாலும், தீவிரவாதம் இருந்தாலும், எதிரிகள் இருந்தாலும், ஊடகங்கள் எப்படியான அபகீர்த்தியை ஏற்படுத்தினாலும் கை, கால் அடக்கிக் கொண்டு மறைந்திருக்க மாட்டேன்.

கை, கால்களை நீட்டி முதுகை நேராக வைத்துக் கொண்டு கம்பஹா மாவட்டத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்வேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  தான் தற்போது பேசுவதில்லை எனவும் உண்பதற்கு மாத்திரமே பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

களனிக்கு தான் அப்போது வந்தபோதுள்ள நிலைமையும் இன்றுள்ள நிலைமையும் மக்களுக்கு நன்கு தெரியும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.  மக்களின் சக்தி தனது சக்தி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. இவரின் பேட்டியை பார்க்கும்போது ...

    எனக்கு, நான் சந்திரனில் உள்ளது போல் இருக்கிறது .

    ReplyDelete
  2. அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியாமல் போனதால்...கொடுமையிலும் கொடுமை இன்று கொடிய சாத்தான்களெல்லாம் வேதம் ஓத தொடங்கிவிட்டன.அரசியலில் கோமாளிகள் மலிந்துவிட்டனரா? இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த கன்றாவியை................

    ReplyDelete

Powered by Blogger.