Header Ads



அட்டாளைச்சேனைக் அந்நூர் மகாவித்தியாலய வித்தியாரம்ப நிகழ்வுகள்

(எஸ்.எல். மன்சூர்) 

அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள அந்நூர் மகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற தரம் ஒன்றுக்கான வித்தியாரம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. பாடசாலையின் அதிபரும், தற்போதைய அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரியுமான ஏ.சி;. கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அப்பாடசாலையின் பழைய மாணவருமான எஸ்.எல். முனாஸ் சிறப்பதிதியாகவும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர். எஸ்.எல். மன்சூர் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். 110மாணவர்கள் இம்முறை தரம் ஒன்றுக்கு இப்பாடசாலைக்கு இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய நிகழ்வுகளில் அதிதிகளையும், மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் கலந்துகொள்வதையும் படங்களில் காணலாம்.








No comments

Powered by Blogger.