Header Ads



முஸ்லிம்களின் சக்தியை நாடிபிடித்து பார்க்கின்ற ஒரு சதி..!


(by faji)

அனுராதபுர நிகழ்வு முஸ்லிம்களின் சக்தியை நாடிபிடித்து பார்க்கின்ற ஒரு சதியாகும்.அதன் எதிர்விளைவே அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கும்.இன்று வெறும் புத்து மண்ணாகவும்,புழுதி மண்ணாகவும் இருக்கின்ற இனவாத இயக்கம் பாரிய கோட்டைகளாக மாறும் சந்தர்பத்தையும் உருவாக்கும்.முஸ்லிம் சமூகத்தின் கவனயீனம் இதை உறுதிப்படுத்திவிடும்.       

இன்றைய இறுக்கமான சூழலில் உலமா சபையை உறுதிப்படுத்தி பக்கபலமாக இருக்க அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. அதனூடாக பல நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதே சமயம் உலமாசபை அரசியல் தலைவர்களை அழைத்து  மேற்வேண்டிய கொள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய வேண்டும். அல்லாஹு வையும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நேசிக்காமல்  முஸ்லிம் சமூகத்கை பாதுகாக்க குரல் கொடுக்க மறுத்து  தங்களுடைய   ஆசாபாசங்களுக்காய்  காபிர்களுக்கு அடிபணியும் தலைவர்களுக்கு "முனாபிக்" , "முர்தத் "எனும் "பத்வா" வை கொடுக்கவும்  தயங்க கூடாது.

உலமா சபையின் நகர்வுகள் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கவேண்டும். இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் உரிமை மீறல் தொடர்பான கவனத்தை பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொருவகையான வளங்களை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவை இஸ்லாத்தின் வளச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் அதுவே முஸ்லிம் என்பதற்க்கான அடையாளம்.உலமாக்கள்,அரசியல் வாதிகள்,சட்டத்தரணிகள்,வேறுதுறை சார்ந்தவர்களும்  ஒன்றிணைய வேண்டும்.    

 மேலும் "இது ஒரு சிறிய குழு"என்ற ஆறுதல் வார்த்தை அபாயகரமானது என்பதையும் விளங்கி   செயற்பட  வேண்டும்.ஒரு சமூகத்தின் மீது  வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயலுக்கு ஜனநாயக அந்தஸ்த்து வழங்குவது இனச்சுத்திகரிப்புக்கு தேவையான இயக்க சக்தியாக கருத முடியும்.

 "ஒரு அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கி இருக்க அவன் அவர்களின் நலனை காக்க தவறினால் ,சொர்கத்தின் வாடையை கூட அவன் பெறமாட்டான் " ஸஹீஹ் புகாரி.



8 comments:

  1. Arasiyal vaathikalai thookki kuppai il podduviddu ulamaa sabaiyum islaamiya iyakkangkalaiyum amaippukalum sernthu kurunaagal. Mmc abthul satthaar (unmaiyaana Muslim)avarkalaiyum inaitthukkondu uriya saddanadavadikkai moolam matrum melidangkalai santthitthu seyalpada vendum. Aduttha therthalil eathaavathu oru perinavaatha kadchchikke vaakkalippom. Vvaakkuruthiyum kodukkalaam.

    ReplyDelete
  2. எங்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஒரு விஷியத்தை சொல்வது ''செவிடன் காதில் சங்கு ஊதிய கதை தான்'' இவர்களுக்கு என்ன பெயர் சொல்லி பத்வா கொடுத்தலும் பிரயோசனம் இல்லை,அதையும் தனக்குக் கிடைத்த ஒரு பட்டம் என்று சந்தோஷப்படுவான், ஏமாளிகள்,,,,

    ReplyDelete
  3. இடித்து நொருக்கப்படும் பள்ளிவாசல்களும்
    விரட்டியடிக்கப்படும் மக்கள் குடியிருப்புக்களும்,
    ராஜபக்சகுடும்ப சர்வாதிகாரத்தில் ஒட்டிக்கிடக்கும் அரசியல்வாதிகட்கு உறைக்காதபோது, இளைஞர்கள் ஒன்று திரளவேண்டிய கட்டாய்ம் வந்து விட்டது. இந்த அரச சாம்ராஜ்ஜியத்தின் கூஜா தூக்கிகள்தான் இவர்கள்.

    ReplyDelete
  4. அரசியல் வாதிகள் மூலம் எமது சக்தியைக் காட்டுவதென்பது ஏட்டுச்சுரக்காய் கதைதான்,அது மட்டுமல்ல எமது பலவீனத்தை காட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை,நாம் பிரிந்திருப்பதும்,காட்டிக்கொடுப்பதுமாக இருக்கிறோம்(காட்டிக்கொடுத்தவர்கள் யார் என்பதை இச்சமூகம் புரிந்து கொள்ளுமா என்பதே ஒரு கேள்வியாக இருக்கிறது)என் சகோதரர்களே குர்ஆன் ஹதீஸ் ஒன்றே நாம் இணைவதற்கு ஒரே வழி இவ்வாறு இணைந்தோம் என்றால் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை அல்லாஹவின் உதவியும் கிட்டும்.

    ReplyDelete
  5. கொடிய இனவாதங்களின் தாய் என உலக அரங்கில் முத்திரை குத்தப்பட்ட சியோனிஸ இஸ்ரேலின் கைங்கரியமே இந்த தேரவாதம். இதன் அடுத்த கட்டம் முஸ்லிம்களுக்குள் சிறு ஆயுதக் குழுக்களை முளைவிப்பது.அதனை பல்லூடகங்களின் உதவியோடு பூதாகரப் படுத்தி கலவரங்களை திணித்து ஒரு இனச்சுத்திகரிப்பை ஏற்படுத்திவதன்மூலம் இலங்கையில் மீண்டும் ஆயுத விற்பனையை அரங்கேற்ற கட்டம் கட்டமாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.இஸ்லாமோபோபியா இஸ்லாம் ஒரு அச்சநோய் என்கிற கொடிய வைரசை ஏவி விட்டு சிங்களவர்களை தூண்டிவிட முயற்ச்சிக்கும் ஈனச்செயலே இவை. ஒரு கல் இரு பழம் தமது பரம வைரிகலான முஸ்லிம்களை அழிப்பது,தமது ஆயுத விற்பனையை அதிகரிப்பது.இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேலின் ஆயுத விற்பனை வீழ்ச்சி கண்டதை ஈடுசெய்யும் நோக்கிலேயே இத்தயாரிப்புக்கள் அணைத்தும் மேற்கொள்ளப் படுகின்றன.இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில மாதங்களில் புனித குத்ஸ் யூதர்களிடமிருந்து மீட்கப்படும் என்கிற நல்ல செய்திகள் கிடைத்துள்ளது. கொடியநாஸ்தீக யூத தீமைகள் உலகை விட்டும் அழியப்போகின்ற அந்திம தருவாயில் சமது செயல்திறனை வெகுவாக அதிகரித்து நாச அழிவுச்செயல்களை மேற்கொள்கின்றனர்.மியன்மாரை போன்றே காவியுடையை எமக்கெதிராக திருப்பி உள்ளனர்..

    ReplyDelete
  6. We can't . Hope/ trust with our politicians. There are fest politicians then after muslims

    ReplyDelete
  7. ஆம் Jafna Muslim. உங்களை போன்று மற்ற அனைத்து இயக்கம்களும் நமக்காக கட்டாயம் பாடுபட வேண்டும், அல்லாஹ் நம் இதயத்தை பலப்படுத்துவானாக! அமீன்.

    ReplyDelete

Powered by Blogger.