Header Ads



ஷிராணி பண்டாரநாயக்கா பதவி நீக்கம் - ஜனாதிபதி மஹிந்த தரப்பில் அறிவிப்பு


(Tm) நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளார். என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவித்தல் கடிதம் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான ஜனாதிபதியின் கடிதம் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது என அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. கூற்று 1: சட்டம் தன் கடமையைச் செய்யும்

    கூற்று 2: சட்டம் ஒரு இருட்டறை என அறிஞர் அண்ணா சொன்னார்

    இதில் எது உண்மை ?

    எதுக்கும் ஹசன் அலி கிட்ட கேளுங்கோ சில நேரம் சரியாக சொல்வார், இல்லேண்டா ரூம் போட்டு யோசிப்பார்.

    ReplyDelete

Powered by Blogger.