Header Ads



ஈராக் சிறைச்சாலையிலிருந்து போராளிகள் தப்பினர் - ஆயுதங்களையும் எடுத்து சென்றனர்



ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடி விட்டனர். அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அந்த கைதிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. 

இந்நிலையில், நேற்று அதிகாலை சிறையின் ஜன்னல் வழியாக வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட கைதிகள், காவல் கோபுரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்களை தாக்கி, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் அள்ளிச் சென்றனர். 

பாதுகாப்பு மிகுந்த பாக்தாத் சிறைக்குள்ளிருந்து கைதிகள் தப்பிச்சென்றது குறித்து காவலர்களிடம் உயர் அதிகாரிகள்   விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments

Powered by Blogger.