Header Ads



சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் பாலர் பாசாலையின் 17வது ஆண்டு நிறைவு விழா


(சௌஜீர்)

சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் பாலர் பாசாலையின் 17வது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த கலை விழாவும் (12.01.2013) கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது பாடசாலைக் கீதம், குழு நடனம், அபினய நடனம், தனிப் பாடல், குழுப் பாடல், ஆங்கில, சிங்கள பேச்சு, சிறு துஆக்கள் போன்ற பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் பாலர் பாடசாலை சிறார்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது.

முன் பள்ளி சிறார்கள் அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் முதல்வரினால் வழங்கப்பட்டது.

ஒக்ஸ்போர்ட் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எஸ்.ஜமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட தொலைக்கல்வி போதனாசிரியரும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தருமான அல்-ஹாஜ் எம்.எம்.ஆதம்பாவா, விசேட அதிதியாக பாலர் பாடசாலை கல்விப் பணியக இணைப்பாளர் ஐ.எல்.எம்.அனீஸ் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.










No comments

Powered by Blogger.