அட்டாளைச்சேனையில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
(இக்பால் எம் பிஹாம்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட திராய்க்கேணி, அஷ்ரப் நகர், ஆலம்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார நுன்கடன் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2012) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பயனாளி ஒருவருக்கு நுன்கடன் காசோலை வழங்குவதையும், மீள் எழுச்சித் திட்டத்தின் அம்பாரை மாவட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர, மெத்தா சமாஜ இணைப்பாளர் எம்.எஸ் பைறுஸ், அம்பாரை,மொனராகலை சிவில் பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி கேணல் திலகரட்ன ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.



Post a Comment