அட்டாளைச்சேனையில் விசேட இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு
எஸ்.எல். மன்சூர்
அட்டாளைச்சேனையில் விசேட இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு நடைபெறும். கிழக்கு மாகாணம், தென்கிழக்கின் அட்டாளைச்சேனை நகரில் அமைந்துள்ள பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு 05.10.2012ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஜூபஹூத் தொழுகைத் தொடர்ந்து இடம்பெறவிருக்கின்றது.
இச்சொற்பொழிவினை அகில இலங்கையின் ஜம்யத்துல் உலமா சபையின் உபதலைவரான அஷ்சேஹ் அல்ஹாஜ் யூசுப் முப்தீ (பின்தூரி) அவர்கள் ஆற்றவிருக்கின்றார். தற்கால இஸ்லாமிய உலகின் இடம்பெற்றுவரும் பலதரப்பட்ட விடயங்களைப் பற்றியும் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment